Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 தெருநாய்கள் தீ வைத்து எரிப்பு : சென்னை அருகே பரிதாபம்

Webdunia
புதன், 15 ஜூன் 2016 (19:11 IST)
சென்னைக்கு அருகில் உள்ள மேல்மருவத்தூரில் ஜீன் 5ஆம் தேதி சுமார் 50 தெரு நாய்களை கிராம மக்கள் எரித்துக் கொன்ற விவகாரம் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மேல்மருவத்தூர் அருகே உள்ள கீழமூர் எனும் கிராமத்தில் கடந்த 5ஆம் தேதி, 50 நாய்களை அந்த ஊர் கிராம மக்கள், மண்ணெண்ணை ஊற்றி எரித்துக் கொன்றுவிட்டதாக விலங்கு நல ஆர்வலர் அஸ்வத் என்பவர் போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
 
இதன் பேரில் அங்கு சென்று பார்வையிட்ட போலீசார், அங்கு நாய்கள் எரித்துக் கொல்லப்பட்டதை கண்டுபிடித்தனர். பாதி எரிந்த நிலையில் அங்கு கிடந்த நாய்களின் உடலை மீட்டுள்ளனர். அந்த புகாரின் பேரில், அந்த பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
 
விசாரணையில், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு மற்றும் மாடுகளில் சில நாய்கள் கடித்து இறந்துவிட்டதால், கோபமடைந்த அவர்கள், அந்த பகுதியில் சுற்றிய தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்று பின் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிட்டதாக கூறியுள்ளனர்.
ஆனால், கிராம மக்களின் குற்றச்சாட்டை அஸ்வத் மறுத்துள்ளார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நான் செய்தது தப்புதான்.! நேரில் மன்னிப்பு கேட்ட யூடியூபர் இர்பான்.!

பாஜக 305 இடங்களில் வெற்றி பெறும்.! அமெரிக்க அரசியல் ஆலோசகர் கணிப்பு..!

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments