Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடியிலிருந்து தூக்கி வீசப்பட்ட நாய்குட்டி உயிருடன் மீட்பு : வாலிபர்கள் கைது

Webdunia
புதன், 6 ஜூலை 2016 (11:29 IST)
வாலிபர் ஒருவரால் மொட்டை மாடியிலிருந்து வீசப்பட்ட நாய்குட்டி உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 


 
சென்னையை சேர்ந்த ஒரு வாலிபர் ஒரு நாய்க்குட்டியை மாடியிலிருந்து தூக்கி போட்டு கொலை செய்யும் அதிர்ச்சி வீடியோ நேற்று தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
குரூர மனநிலையில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இன்று தனியார் தொலைகாட்சிகளும் ஒளிபரப்பியது. இதைக்கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.  அந்த வாலிபரை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என விலங்கு நல ஆர்வலர் ஒருவர் அறிவித்துள்ளார். 
 
விசாரணையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கவுதம் சுதர்சன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய இருவரும்தான் அதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவுதம் சென்னை குன்றத்தூரில் தங்கியிருந்து கொண்டு,  மருத்துவம் படித்து வருகிறார். அவர் தங்கியிருந்த மாடிக்கு வந்த குட்டி நாயைத்தான் அவர் மாடியிலிருந்து தூக்கி கீழே வீசியிருக்கிறார். இதை அவரது நண்பர் ஆஷில் பால் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் இருவர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தூக்கி விசப்பட்ட அந்த குட்டி நாய், காலில் காயத்தோடு மீட்கப்பட்டுள்ளது. அதற்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியன் வங்கி தேர்வு எழுத வெளி மாநிலங்களில் தேர்வு மையம்: சு வெங்கடேசன் எம்பி கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: துபாய் செல்லும் தனிப்படை போலீஸ்.. என்ன காரணம்?

இன்று தான் பள்ளி திறப்பு.. அதற்குள் 13ஆம் தேதி வரை விடுமுறை அளித்த சென்னை பள்ளி..!

அரசு மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட டால்கம் பவுடர், மாவு கலந்த போலி மாத்திரைகள்; எப்படி நடந்தது?

டெலிவரி பாய் கெட்டப்பில் சென்ற Zomato CEO! - அவமரியாதை செய்த Mall ஊழியர்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments