எஜமானை காப்பாற்ற மின்கம்பியை கடித்து உயிரைவிட்ட நாய்

Webdunia
புதன், 4 ஜூலை 2018 (17:48 IST)
மதுரை உசிலம்பட்டியில் மின்சாரம் தாக்கிய எஜமானை காப்பற்ற முயன்ற நாய் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
மதுரை உசிலம்பட்டியில் உள்ள கல்கொண்டான்பட்டியில் பெய்த கனமழையால் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. நேற்று காலை மின்கம்பிகள் அறுந்த விழுந்த வழியாக மாடு ஒன்று சென்று சிக்கியது.
 
இதைக்கண்ட முதியவர் ஒருவர் மாட்டினைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. முதியவர் மீது மின்சாரம் தாக்கியதை கண்ட அவர் வளர்த்த நாய் முதியவரை காப்பாற்ற மின்கம்பியை கடித்து இழுத்துள்ளது.
 
இதில் மாடு, முதியவர் மற்றும் அவரது நாய் என மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதையடுத்து உயிரிழந்த முதியவரின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments