Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'நாட்டின் பிரச்சனைகளுக்கு மோடி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை' - குஷ்பூ காட்டம்

'நாட்டின் பிரச்சனைகளுக்கு மோடி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை' - குஷ்பூ காட்டம்
, வியாழன், 16 ஜூலை 2015 (18:26 IST)
நாட்டிலுள்ள பிரச்சனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை என்று நடிகை குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பூ, முன்னாள் தலைவர்கள் கே.வி.தங்கபாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பூ, “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மீதான வழக்கின் காரணமாக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
 
சட்ட, ஒழுங்கை காக்க வேண்டிய போலீசார் முதல்வருக்கு மட்டும் பாதுகாப்பு கொடுத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். அமைச்சர்கள் மக்களை சந்திக்காமல் அம்மா புராணத்தையே பாடுகிறார்கள். அதிமுக அரசுக்கு மக்கள் நலனில் கொஞ்சம் கூட அக்கறை என்பது இல்லை. இதற்கான பலனை அவர்கள் 2016ம் ஆண்டு அனுபவிப்பார்கள்.
 
பிரதமர் நரேந்திரமோடி உலகம் முழுவதும் சுற்றி வருகிறார். நாட்டில் நடக்கும் பல பிரச்சினைகள் குறித்து அவர் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இனிமேலும் அவர் பதில் அளிப்பார் என்ற நம்பிக்கை இல்லை” என்று கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil