Webdunia - Bharat's app for daily news and videos

Install App

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

Mahendran
திங்கள், 23 டிசம்பர் 2024 (17:02 IST)
BSNL நிறுவனத்திற்கு எந்த விதமான நிலுவைத் தொகையும் பாக்கி இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். 
 
அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்? 
 
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தின் இன்றிரவு 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. 10 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

வெட்கமே இல்லாத பாகிஸ்தான்.. ராணுவ தலைவருக்கு கொடுத்த போட்டோஷாப் பரிசு..!

புதின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்: டிரம்ப் புலம்பல்..!

முகமது யூனுஸை விரைவில் விரட்டுவேன்: பங்களாதேஷ் ராணுவத் தலைவர் அதிரடி

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல் தேதி அறிவிப்பு.. ராஜ்யசபா எம்பி ஆகிறாரா கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments