Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதியவரின் காலில் கத்திரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:26 IST)
அறுவை சிகிச்சையின் போது, தவறுதலாக முதியவரின் காலில் கத்திரிக்கோல் வைத்து தைக்கப்பட்ட சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
 

 
கோவை ராமாநாதபுரம் பகுதியை அடுத்த கல்லுமடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த மாதம் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது கால் இடறி கீழே விழுந்திருக்கிறார். அதனால் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
 
நடக்க முடியாமல் அவதிப்பட்ட அவரை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், 15 நாட்கள் கழித்து அவருக்கு மீண்டும் காலில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவர்களிடம் கூறியுள்ளனர்.
 
அப்போது அவருக்கு மீண்டும் மருத்தவ பரிசோதனை செய்து பார்த்த போது அவரது காலில் கத்திரிக்கோல் இருப்பது கண்டறியப்பட்டது.
 
இந்த சம்பவம் வெளியில் தெரிந்தால் மருத்துவமனைக்கு கெட்ட பெயர் வந்து விடும் என நினைத்த மருத்துவர்கள் உடனடியாக மீண்டும் அவரது காலில் அறுவை சிகிச்சை செய்து அந்த கத்திரிக்கோலை அகற்றியுள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments