Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Senthil Velan
ஞாயிறு, 19 மே 2024 (16:03 IST)
சென்னை திருமுல்லைவாயலில்  கடந்த மாதம் 28ம் தேதி  பால்கனியில் தவறி குழந்தை மீட்கப்பட்ட நிலையில்,  தற்போது அந்த குழந்தையின் தாயார்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெங்கடேசன் - ரம்யா. இத்தம்பதிக்கு 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி குழந்தை ஹைரினுக்கு தாய், பால்கனியில் வைத்து உணவு ஊட்டிக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி பால்கனி கூரையில் விழுந்தது.
 
அப்போது குழந்தை மேற்கூரையிலிருந்து வழுக்கி கீழே விழ இருந்த நிலையில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் இணைந்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டனர்.  இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

ALSO READ: எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!
 
இந்நிலையில் அந்த குழந்தையின் தாய் ரம்யா, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments