Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா. ரஞ்சித்தை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளாத இயக்குனர்கள் யார் தெரியுமா?

பா. ரஞ்சித்தை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளாத இயக்குனர்கள் யார் தெரியுமா?

பா. ரஞ்சித்தை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளாத இயக்குனர்கள் யார் தெரியுமா?
, புதன், 24 ஆகஸ்ட் 2016 (11:37 IST)
அட்டகத்தி படம் மூலம் இயக்குனரான பா.ரஞ்சித், கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் பொழுது, இயக்குனர் வேலு பிரபாகரனிடம் ‘காதல் கதை’ படத்தில் இரண்டு மாதங்களுக்கு ஆர்ட் டைரக்டராக இருந்தார். 


 
தனது கல்லூரி படிப்பை முடித்தப் பின், அனிமேட்டர் வேலை தேடி அளைந்துள்ளார். ஆனால், அவரது தோழி, (இப்போதைய மனைவி) அனிதாவிற்கு அனிமேட்டர் வேலை கிடைத்துவிட்டது, ரஞ்சித்திற்கு கிடைக்வில்லை.

பின், லிங்குசாமி, சேரன் ஆகியோரிடம் சென்று துணை இயக்குனராக சேர்த்துக்கொள்ள சொல்லி கேட்டுள்ளார். இருவரும் அவரை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டனர். பின், இயக்குநர் சசியை அணுகியுள்ளார். ரஞ்சித்தின், வார்த்தைகளை கேட்டு, ”சமூக சீர்திருத்தவாதி போல் பேசுகிறாய், சினிமா உனக்கு செட் ஆகாது” என கூறியுள்ளார். ரஞ்சித், அதை கேட்டு அழுதுகொண்டே திரும்பி வந்துள்ளார்.

பின். ‘மனசெல்லாம்’ படத்தின் இயக்குனர் சந்தோஷிடம் ஸ்டோரி போர்ட் ஆர்டிஸ்டாக வேலைக்கு சேர்ந்தார். பின், ஆர்ட் டைரக்டர் கதிர் மூலம் ‘தகப்பன்சாமி’ இயக்குநர் சிவசண்முகத்திடம் சேர்ந்துள்ளார். அங்கிருந்து, பிலிப் என்ற நண்பர், வெங்கட் பிரபுவிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அப்போது, லிங்குசாமியிடம் சேர்த்துவிடச் சொல்லி வெங்கட் பிரபுவிடம் ரஞ்சித் கேட்டுள்ளார். ”நானே படம் பண்ணபோறேண் என்னுடைய அசிஸ்டண்டா இரு” என்று வெங்கட் பிரபு கூறியுள்ளார். பின் அவருடன் பணியாற்றி, சினிமா நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, இப்போது கபாலி வரை உயர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நன்றி கூற வார்த்தைகள் இல்லை : ரஜினிக்கு ட்விட் போட்ட சிந்து