Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன்’ - குஷ்பூ

’தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன்’ - குஷ்பூ
, வெள்ளி, 19 டிசம்பர் 2014 (19:54 IST)
தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பூ கூறியுள்ளார்.
 
விருதுநகரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய குஷ்பு, ‘1987இல் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். பிறகு, தமிழகத்தின் மருமகளானேன். என்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் இறங்கினேன்.
 
நான் கட்சி மாறியதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் சொல்ல விரும்பவில்லை. நான் சினிமாவில் பெயரும், புகழும் சம்பாதித்து குடும்பத்தை செட்டில் செய்து விட்டுத்தான் கட்சியில் சேர்ந்தேன்.
 
சிலரைப்போல் அரசியலில் சேர்ந்து சம்பாதித்து குடும்பத்தை நடத்த கட்சியில் சேரவில்லை. இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் தாய் வீடு காங்கிரஸ்தான். பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேசும் உரிமை காங்கிரஸ் கட்சியைத் தவிர, வேறு யாருக்கு இருக்கிறது.
 
பாஜக மக்களிடம் பொய் பிரசாரம் செய்து ஆட்சியைப் பிடித்துள்ளது. மோடிமஸ்தான் வேலை காட்டி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்கிறார்.
 
தமிழகத்தில் இருந்து சென்றவர் கூட்டத்தில், அவரது கட்சித் தலைவர் புகைப்படத்தை மடியில் வைத்து உட்கார்ந்து கொண்டு அமர்ந்துள்ளார், இந்தக் கொடுமை தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil