Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தனை குட்டிக் கர்ணம் அடித்தாலும் திமுக வெற்றி பெற முடியாது: பழ.நெடுமாறன் சாபம்

எத்தனை குட்டிக் கர்ணம் அடித்தாலும் திமுக வெற்றி பெற முடியாது: பழ.நெடுமாறன் சாபம்
, திங்கள், 12 அக்டோபர் 2015 (23:53 IST)
எத்தனை குட்டிக் கர்ணம் அடித்தாலும் இனி வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது என பழ.நெடுமாறன் சாபம் விடுத்தார்.
 

 
இது குறித்துதிண்டுக்கல்லில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
தமிழக மீனவர்களை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை கடற்படை அத்துமீறி தாக்குல் நடத்தி வருகிறது. இதை இந்திய அரசு முறையாக தட்டிக் கேட்கவில்லை. காரணம், தமிழக மீனவர்களை இந்திய குடிமக்களாக கருதாததுதான்.
 
தமிழகத்தில், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ளார். தினமும், சைக்கிள், ஆட்டோ, டூவீலர் என பல்வேறு வாகனங்களில், கலர் கலர் சட்டை அணிந்து செல்கிறார். எத்தனை குட்டிகர்ணம் அடித்தாலும் தேர்தலில் திமுக வெற்றி பெற முடியாது.
 
தமிழக துணை முதல்வராக இருந்த போது மு.க.ஸ்டாலின் இதுபோல், தமிழக மக்களை சந்தித்தாரா? சென்னையின் மேயராக இருந்த போது ஸ்டாலின் செய்த சாதனை என்ன? பெரிதாக எதுவும் இல்லை.
 
அட்டாக் பாண்டி, யுவராஜ் போன்றவர்கள் தலைமறைவாக இருந்த இடம் காவல்துறைக்கு தெரிந்தும் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக அவர்களை கைது செய்யவில்லை. அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருப்பது சாபக்கேடு.
 
தமிழகத்தில் இன்னும் பல முக்கிய கொலை வழக்கில் குற்றவாளிகள் கைகு செய்யப்படவில்லை. எனவே, தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil