Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

Mahendran
வியாழன், 29 மே 2025 (10:48 IST)
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரும்,  அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருக்கமான நபருமான பான் வசந்த் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுக்க கோடுகளை மீறி, நிர்வாக சிக்கல்கள் மற்றும் மன்ற கூட்டங்களில் எதிர்ப்பாராத முறையில் செயல்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
மதுரையில் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவே, முதல்வர் ஸ்டாலின் மே 31ம் தேதி மதுரைக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியின் நம்பிக்கைக்குரிய ஒருவர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேயர் நடத்திய மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேயரின் செயல்களில் பான் வசந்தின் தாக்கம் இருந்ததாக கட்சியினரிடையே ஆதாரங்களோடு புகார்கள் வந்துள்ளன. மேலும், நகராட்சியில் நடந்த ஒப்பந்த ஒதுக்கீடு மற்றும் நிர்வாக முறைகேடுகளில் அவரின் ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குள் வந்துள்ளன. இதனையடுத்து, அவரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments