Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்நாடகாவை கண்டித்து போராட்டம்: திமுக ஆதரவு; கருணாநிதி அறிவிப்பு

கர்நாடகாவை கண்டித்து போராட்டம்: திமுக ஆதரவு; கருணாநிதி அறிவிப்பு
, வியாழன், 15 செப்டம்பர் 2016 (00:38 IST)
வருகின்ற 16ஆம் தேதி கர்நாடகாவை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதி தெரிவித்து உள்ளர்.
 

 
வரும் செப்டம்பர் 16ஆம் தேதி அன்று காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வலியுறுத்தியும், தமிழகத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக் குழு அமைக்க வலியுறுத்தியும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
 
இந்த முழு அடைப்புப் போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி நீர்ப் பிரச்னையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட வலியுறுத்தியும், கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்திட தமிழ்நாடு அனைத்து விவசாயச் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு, வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சம்மேளனம், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
 
இந்த முழு கடை அடைப்புப் போராட்டத்திற்கு திமுகவின் ஆதரவினை அந்த அமைப்புகளின் சார்பில் கோரப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையினை ஏற்று வரும் 16ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு கடையடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதென திமுக முடிவு செய்திருக்கிறது.
 
அதனால், திமுகவின் உடன்பிறப்புகள் அனைவரும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவினைத் தந்து, போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறி உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேறு ஒருவருடன் நிச்சயம்: காதலியை குத்திக்கொன்ற காதலன்