களத்தில் குதித்த கருணாநிதி: முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு!
களத்தில் குதித்த கருணாநிதி: முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுக ஆதரவு!
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து நாளை மறுநாள் நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்துக்கு திமுகவினர் ஆதரவு அளிக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்றது. கர்நாடக அரசும் இந்த விவகாரத்தை சரியாக கையாளவில்லை.
கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டார்கள், கடைகள், லாரிகள், பஸ்கள் உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டன. இதனை கண்டித்து தமிழ்நாடு வணிகர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வரும் 16-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்நிலையில் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு திமுக தனது ஆதரவை அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் திமுகவினர் அனைவரும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.