Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்பாட்டத்தில் இறங்கும் திமுகைனர் - உறுதிப்படுத்திய ஸ்டாலின் !

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (08:14 IST)
இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம். 

 
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து நேற்று சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மாற்று எரிபொருளை கண்டுபிடித்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறியதும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.
 
இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வரும் 22 ஆம் தேதி தமிழகத்தில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். 
 
அதன்படி, இன்று பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை எதிர்த்து திமுகவினர் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இதனை திமுக தலைவர் ஸ்டாலினும் உறுதிப்படுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments