Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை
, வெள்ளி, 15 ஜூலை 2016 (13:10 IST)
அச்சிறுப்பாக்கம் திமுக பேரூராட்சி மன்ற துணைத் தலைவரை, மர்ம கும்பல் ஒன்று, பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலையில் வெட்டி கொலை செய்து, குற்றவாளிகள் தப்பிச் சென்றனர்.
 

 
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் சீனிவாசன் (46). இவர், திமுகவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பிரதிநிதியாகவும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மன்ற துணை தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
 
இவர், வியாழக்கிழமை தொழுப்பேடு அருகே பெரும்பேர் கண்டிகை கிராமப்பகுதியில் உள்ள தத்தாத்ரேய கோயிலுக்கு சென்று திரும்பும்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்குபேர் கொண்ட மர்ம கும்பல் அவரை மடக்கி அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது.
 
தகவல் அறிந்த அச்சிறுப்பாக்கம் காவலர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த படுகொலையை அடுத்து அச்சிறுபாக்கத்தில் நகரப்பகுதியில் உள்ள பஜார் வீதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவாதியை ராம்குமார்தான் கொன்றார் என்பதற்கான காவல்துறையின் தடயங்கள்