மாநிலங்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (10:41 IST)
தமிழ்நாட்டின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் வெளி நடப்பு செய்துள்ளனர்.

 
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இது குறித்து இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இது குறித்து விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு மறுத்து விட்டார்.
 
இதையடுத்து திமுக எம்.பிக்கள் தொடர் முழக்கமிட்ட்டு, அமளியில் ஈடுபட்டனர். ஆனாலும் விவாதத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து முழக்கமிட்டபடி,திமுக எம்.பிக்கள் வெளி நடப்பு செய்தனர். தமிழ்நாடு எம்.பிக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களும் வெளி நடப்பு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments