மோடியை சந்திக்கும் திமுக எம்.பி.க்கள் - பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (14:50 IST)
காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால் முதல் கட்சியாக திமுக வர தயராக உள்ளது. ஆனால், அந்த முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபடவில்லை.
 
காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி,க்கள் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியை சந்திப்பார்கள். இன்னும் சில நாட்களில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அவர்களது கருத்தை கேட்க உள்ளோம்.
 
அதன்படி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்ப இருக்கிறோம். அதன் பிறகும் ஆளும் கட்சி செயல்படவில்லை என்றால் அவர்கள் செய்ய வேண்டிய பணியை திமுக செய்ய தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

60 ஏக்கரில் கார் பார்க்கிங்!.. 24 ஆம்புலன்ஸ்... ஈரோடு தவெக கூட்டத்துக்கு ஏற்பாடுகள்!...

தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்!.. ஈரோட்டில் பள்ளிக்கு விடுமுறை!...

கிண்டில் (Kindle) மூலம் அமேசான் கணக்கு ஹேக்: எச்சரிக்கை தரும் நிபுணர்!

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments