Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சந்திக்கும் திமுக எம்.பி.க்கள் - பின்னணி என்ன?

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2016 (14:50 IST)
காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி.,க்கள் பிரதமர் மோடியை சந்திப்பார்கள் என எதிர்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினால் முதல் கட்சியாக திமுக வர தயராக உள்ளது. ஆனால், அந்த முயற்சியில் ஆளுங்கட்சி ஈடுபடவில்லை.
 
காவிரி பிரச்னை தொடர்பாக திமுக எம்.பி,க்கள் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடியை சந்திப்பார்கள். இன்னும் சில நாட்களில் விவசாய பிரதிநிதிகளை அழைத்து அவர்களது கருத்தை கேட்க உள்ளோம்.
 
அதன்படி தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு அனுப்ப இருக்கிறோம். அதன் பிறகும் ஆளும் கட்சி செயல்படவில்லை என்றால் அவர்கள் செய்ய வேண்டிய பணியை திமுக செய்ய தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments