நான் அதிருப்தியில் இல்லை, பிரதமரை பாக்கவும் இல்லை! – திமுக எம்.பி தடாலடி விளக்கம்!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (14:52 IST)
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் திமுக மீது அதிருப்தியில் இருப்பதாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் அதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் திமுக பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகவும், தான் உயர்பதவிகளை அடையவிடாமல் பலர் தடுத்ததாகவும் சமீபத்தில் ஒரு ரேடியோ சேனலுக்கு கு.க.செல்வம் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுக எம்.பியான ஜெகத்ரட்சகன் கட்சி மீது அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் பரவியது. இதற்கு விளக்கம் அளித்துள்ள எம்.பி ஜெகத்ரட்சகன் “நான் திமுக மீது அதிருப்திலும் இல்லை, பிரதமரை சென்று சந்திக்கவும் இல்லை. என்மீது சமூக வலைதளங்கள் மூலமாக வதந்தி பரப்பிக் கொண்டிருப்பவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது” என தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு பின் ஓட்டு இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?!... வாங்க பார்ப்போம்..

ஓசூரில் காவேரி கூக்குரல் சார்பில் ‘ஒரு முறை நடவு, ஆயுள் முழுவதும் வரவு’ கருத்தரங்கு: மத்திய வேளாண்துறை அமைச்சர் பங்கேற்பு..!

வெள்ளை மாளிகையில் டிரம்ப் வைத்த கிறிஸ்துமஸ் விருந்து.. ’தசாவதாரம் பட நடிகை பங்கேற்பு..!

சென்னை வரைவு வாக்காளர் பட்டியல்.. கொளத்தூரில் 1 லட்சம்.. சேப்பாக்கத்தில் 89 ஆயிரம் பெயர்கள் நீக்கம்..!

வங்கதேசம் போல் தான் மேற்குவங்கமும் உள்ளது.. சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments