கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோ மட்டும் ஏன் உயர்வு! – திமுக எம்.பி கேள்வி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (11:24 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவது குறித்து திமுக எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோ, டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள திமுக எம்.பி வில்சன் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதிக படியான வரிகள் காரணமாக நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனாவால் ஏற்கனவே மக்கள் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்காக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments