Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சா எண்ணெய் விலை குறைவு.. பெட்ரோ மட்டும் ஏன் உயர்வு! – திமுக எம்.பி கேள்வி!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (11:24 IST)
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருவது குறித்து திமுக எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோ, டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கேள்வியெழுப்பியுள்ள திமுக எம்.பி வில்சன் “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் அதிக படியான வரிகள் காரணமாக நமது நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனாவால் ஏற்கனவே மக்கள் பொருளாதார பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் அவர்களுக்காக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

தமிழக முதல்வர் தாயார் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!

தனிமை சிறையில் இம்ரான் கான்.. மனைவி சந்திக்க கூட அனுமதி மறுப்பு..!

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இன்று முதல் தாம்பரம் வராது.. என்ன காரணம்?

அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments