Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பயம் இருக்க நேரத்துல இது தேவைதானா? – திமுக எம்.பி கண்டனம்

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (13:42 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் தமிழக அமைச்சர்கள் தேவையில்லாமல் கூட்டம் கூட்டுவதாக திமுக எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கலில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான அடிக்கால் நாட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் வந்தனர். அவர்களை வரவேற்க பெருந்திரளான மக்கள் கூட்டம் சாலைகளின் இருப்பக்கமும் இருந்தனர். முன்னதாக மதுரையில் அடிக்கல் நாட்டு விழாவின்போதும் ஏராளமான மக்கள் முதல்வரை வரவேற்க கூடியிருந்தனர்.

இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ள திமுக எம்.பி மாணிக்கம் தாகூர் ”உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பல நாடுகள் பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்களை ரத்து செய்துள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் முதல்வரை வரவேற்க ஏராளமான அப்பாவி மக்களை சாலையில் நிறுத்தி சிக்கலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “முதல்வரை மகிழ்விப்பது மட்டுமே அமைச்சர்களின் வேலையல்ல. அமைச்சர் விஜயபாஸ்கர் போன்றோர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments