Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு தொகுதிக் கூட தரல.. ஆனாலும் திமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன கமல்! – ஏன் தெரியுமா?

Prasanth Karthick
சனி, 9 மார்ச் 2024 (13:53 IST)
எதிர்வரும் மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து திமுக – மக்கள் நீதி மய்யம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.



மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக முடித்து தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக நடிகர் கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் சென்றிருந்தார். இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி பதவி தருவதாக சொல்லி இரு கட்சிகள் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் போட்டியிடாமல் ஆதரவை மட்டும் திமுகவுக்கு வழங்க உள்ளது.

ALSO READ: காணாமல் போன சிறுவன் கால்வாயில் சடலமாக மீட்பு! – சென்னையில் அதிர்ச்சி!

கூட்டணி முடிவான நிலையில் இதுகுறித்து பேசிய கமல்ஹாசன் “மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஆனால் இந்த கூட்டணிக்கு எல்லா ஒத்துழைப்பும் அளிப்போம். இது பதவிக்கான விஷயம் அல்ல. நாட்டுக்கான விஷயம் என்பதால் எங்கு கைக்குலுக்க வேண்டுமோ அங்கே கைக்குலுக்கியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments