இவர்கள்தான் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர் – திமுக எம்.எல்.ஏ ஆதங்கம்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (10:23 IST)
சட்டமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் நோட்டாவுக்கு வாக்களிப்பது யார் எனக் கேள்வி எழுப்பினர்.

நேற்று சட்டமன்றத்தில் சிறு மற்றும் குறு தொழில்துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பட்டாசு தொழிலாளர்களைக் காப்பாற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பினர். மேலும் ’அவர் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது.  ஆனால் அதன் மூலம் புதிதாக யாரும் தொழில் தொடங்கியதாக தெரியவில்லை எனக் கூறினார்.

இதனால் புதிதாக யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வேலைக் கிடைக்காத இளைஞர்கள் விரக்தியில் நோட்டாவுக்கு வாக்களிக்கின்றனர். அதனால் புதிதாக தொழில்களைத் தொடங்கி அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments