Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெ அன்பழகன் மீண்டும் கவலைக்கிடம்: அதிர்ச்சியில் தொண்டர்கள்

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (19:54 IST)
கொரோனா சிகிச்சைக்காக கடந்த 2ஆம் தேதி சென்னை கொரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவரது நேற்று அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாகவும், இன்று அவர் கண்விழித்து பார்த்ததாகவும் தகவல்கள் வெளிவந்ததால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான மருத்துவமனையின் அறிக்கையின்படி ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஜெ.அன்பழகன் அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என திமுக தொண்டர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் அவர் குணமாகி வீடு திரும்புவார் என்று திமுகவினர் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments