Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கண்விழித்துப் பார்த்த ஜெ அன்பழகன் – திமுகவினருக்கு மகிழ்ச்சி செய்தி!

Webdunia
திங்கள், 8 ஜூன் 2020 (09:11 IST)
திமுக மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வெண்ட்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள ரேலா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு  80%  ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் உதவியுடன் அளிக்கப்பட்டது. அதையடுத்து அவரது செயற்கை சுவாச அளவு படிப்படியாக குறைத்து 40 சதவீத அளவுக்குக் கொண்டு வரப்பட்டது.

தற்போது மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு 29% ஆக குறைந்திருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. நேற்று அவர் கண்விழித்துப் பார்த்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டதாகவும் அதைக்கேட்டு அவர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments