Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை

Webdunia
வியாழன், 14 ஜூலை 2016 (17:00 IST)
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர் சீனிவாசன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.


 

 
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி துணைத் தலைவராகவும், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளராகவும் இருந்த சீனிவாசன்(45), இன்று காலை கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். 
 
சென்னை-திருச்சி நெடுஞ்சாலை அருகே ஒரு மர்ம கும்பல் திடீரென அவரை வழிமறித்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய சீனிவாசனை ஓட ஓட விரட்டி தலை, கழுத்து, முகத்தில் என சரமாரியாக வெட்டிவிட்டு அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்றனர்.
 
அந்த வழியே சென்ற வாகன ஓட்டிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து, காவல் துறையினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காவல் துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலையாளிகள் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments