Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை! – திருநெல்வேலியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 30 ஜனவரி 2022 (13:09 IST)
திருநெல்வேலியில் திமுக நிர்வாகி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையம்கோட்டை தெற்கு பஜாரை சேர்ந்தவர் பொன்னுதாஸ். 38வது வார்டு திமுக செயலாளராக இருந்து வரும் இவர் பாளையங்கோட்டையில் மதுபான பார் ஒன்றையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதில் போட்டியிட பொன்னுதாஸின் தாயார் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுக்கூடத்தை மூடிவிட்டு வீடு திரும்பிய பொன்னுதாஸை அவரது வீட்டின் அருகே மர்ம கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments