Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: துரைமுகன்

திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: துரைமுகன்

திமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: துரைமுகன்
, புதன், 10 பிப்ரவரி 2016 (23:44 IST)
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் திமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என துரைமுகன் கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, ஊட்டியில், திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக திமுக வலுவான கூட்டணி அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
ஆனால் யாருடன் கூட்டணி? என்பது குறித்து தெரிவிக்க இயலாது. வரும் சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மை பலம் பெற்று தனித்தே ஆட்சியை அமைக்கும் என்றார்.
 
திமுக தலைமை வலுவான கூட்டணிக்காக முயற்சி செய்து வரும் வேளையில், துரைமுருகன் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil