Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக முன்னாள் மேயர் வெட்டிக்கொலை – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

Webdunia
செவ்வாய், 23 ஜூலை 2019 (19:09 IST)
திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை அவரது வீட்டிலேயே மர்ம நபர்கள் புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. திமுக ஆட்சியில் திருநெல்வேலி மேயராக பணிபுரிந்தவர். இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மகேஸ்வரியை, அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த திடீர் படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments