Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது: எடப்பாடி பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (08:42 IST)
சென்னை வெள்ளத்தில் மக்களை தத்தளிக்க விட்ட திமுகவுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் 
 
இந்த விடியா அரசு, ஸ்டாலின் தலைமையில் இருக்கிற திமுக அரசை காப்பாற்றுவது ஊடகங்கள் தான்.  நீங்கள் உண்மையான செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கவில்லை. 
 
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் கூட வாங்காது.  மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, இந்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மாநகர மக்கள், தமிழ்நாடு மக்கள் தக்க பாடத்தை திமுகவுக்கு புகட்டுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
 
 திமுக வலிமையான கூட்டணியில் இருந்தாலும் இந்த மழை வெள்ளம் திமுகவுக்கு பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி தந்திருக்கிறது என்றும் அதனால் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றும் அரசியல் விமர்சகர்களும் பார்த்து தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments