Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை

Webdunia
சனி, 2 ஜனவரி 2021 (10:08 IST)
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் தற்கொலை
 
தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சிலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதால் ஆண்டிபட்டி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஆண்டிப்பட்டி தாலுகா கடமலை-மயிலை ஒன்றியம் 8-வது வார்டு கவுன்சிலராக தேர்வு பெற்றவர் தமிழ்செல்வன். இவர் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவர் திடீரென தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறினார். 
 
மொத்தம் 14 வார்டுகள் இருந்த நிலையில் அதில் தி.மு.க 7, அ.தி.மு.க 7 என சம அளவில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில் தான் 8-வது வார்டு திமுக கவுன்சிலரான தமிழ்செல்வன் திடீரென அ.தி.மு.கவில் இணைந்தார். இவரது முடிவால் கடமலை-மயிலை ஒன்றிய சேர்மன் பதவி அ.தி.மு.க வசமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் திடீரென ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-விற்கு அணி மாறிய ஒன்றிய கவுன்சில தமிழ்செல்வன் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments