Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கவுன்சிலர் வேட்பாளர் திடீர் மரணம் – அந்தியூரில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (10:41 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் அந்தியூர் திமுக கவுன்சிலர் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரின் அத்தாணி பகுதியில் 3வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிடுபவர் ஐயப்பன். தேர்தல் தேதி அறிவித்தது முதலாக வார்டு முழுவதும் சுற்றி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வாக்கு சேகரிப்பு பணியை முடித்து விட்டு வீடு திரும்பியவர் இரவு திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் வேட்பாளரின் திடீர் மரணம் அப்பகுதி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments