திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (08:35 IST)
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக வட்ட செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மடிப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் செல்வம். அப்பகுதி திமுக வட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் போட்டியிட அவரது மனைவில் பெயரில் விருப்பமனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் ராஜாஜி நகர் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்வத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் செல்வம் கொலைக்கு தொழில் பகை காரணமா? அரசியல் காழ்ப்புணர்ச்சியா என்ற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வரூவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments