அதிமுக, பாஜக நெருங்கி வருகிறது என்றும், இரு கட்சிகளும் கூட்டணி வைக்குமோ என திமுக தலைவர் கருணாநிதி கூறியது ஊடகங்களில் விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி பாஜகவும், அதிமுகவும் நெருங்கி வருகிறது. இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியே வந்தபோது, “கூடா நட்பு கேடாய் முடியும்” என கூறிவிட்டு, மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன்? அவர் மட்டும் கூட்டணி வைக்கலாம் மற்றவர்கள் வைக்க கூடாதா? என கேள்வி எழுப்பினார் அவர்.
மேலும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் வரையில் திமுகவுக்கு இறங்கு முகம்தான் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.