பொங்கல் டோக்கனை அதிமுகக்காரங்க ஏன் தறாங்க?! – கோர்ட்டுக்கு சென்ற திமுக!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (11:44 IST)
தமிழக அரசின் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அதிமுகவினர் விநியோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆண்டுதோறும் பொங்கலுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பணமும், கரும்பு, வெல்லம் உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பையும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ஜனவரியில் வர உள்ள பொங்கலுக்கு தொகையை ரூ.2500 ஆக உயர்த்தி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான பொங்கல் டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் பொங்கல் பணத்திற்கான டோக்கனை அந்தந்த நியாயவிலைக்கடை ஊழியர்களே மக்களிடம் வழங்க வேண்டும். ஆனால் பல பகுதிகளில் அதிமுகவினர் இந்த டோக்கனை வழங்கி வருகின்றனர் என குற்றம்சாட்டி, பொங்கல் டோக்கனை அதிமுகவினர் வழங்க தடை விதிக்க வேண்டும் என திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments