Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை புழல் சிறையில் மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (00:37 IST)
மதுவிலக்குப் போரட்டம் காரணமாக, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

 
மதுவிலக்கை அமல்படுத்த கோரி போராடி காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுத் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைத் திமுகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
 
இந்தச் சம்பவம் குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மதுவுக்கு எதிராகப் போராடிய போது மாணவ - மாணவியர்களைக் காவல்துறையினர் லத்தியால் கொடூரமாக அடித்துத் தாக்கியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்த மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும், வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், அவர்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments