Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்டாலின் ஒப்புக்கொண்டதே போதும்: மு.க. அழகிரி

ஸ்டாலின் ஒப்புக்கொண்டதே போதும்: மு.க. அழகிரி
, வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (11:34 IST)
திமுக ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சர் கருணாநிதி தான் என ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். அதுவே எனக்கு போதும் என மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக வின் ஆட்சிகாலத்தில் தலைவர் கருணாநிதியே முதலமைச்சர் ஆவார். வருகின்ற சட்டமன்றத்தேர்தலில் 6 ஆவது முறையாய கலைஞர் கருணாநிதியே  தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்பார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் தம்மை ஒருபோதும் திமுகவின் முதல்வர் வேட்பாளர் என சொல்லிக் கொண்டதில்லை என்றும் அத்தகைய எண்ணமும் எனக்கு ஒருபோதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மு.க.அழகிரி சென்னை விமான நிலையத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அதில் திமுக ஆட்சி காலத்தில் கருணாநிதியே முதலமைச்சர் என்று இப்போதாவது ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளாரே அதுதான் எனக்கு வேண்டும் என்றும், ஆனால் மேடைக்கு மேடை அடுத்த முதல்வர் ஸ்டாலின் என தெரிவித்து வருகின்றனர். மேலும் 2016 சட்டமன்றத்தேர்தலில் ஸ்டாலின் ஆதரவுளர்களே திமுகவில் போட்டியிடுவதை நான் கண்டிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil