Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரையும் சந்திக்க முடியாத நிலையில் கருணாநிதி: காரணம் என்ன?

யாரையும் சந்திக்க முடியாத நிலையில் கருணாநிதி: காரணம் என்ன?

Webdunia
புதன், 26 அக்டோபர் 2016 (13:27 IST)
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவாக இருப்பதால் அவரை பார்வையாளர்கள் யாரும் சந்திக்க வர வேண்டாம் என திமுக சார்பில் கூறப்பட்டது. அவருக்கு என்ன உடல் நலக்குறைவு என்பதையும் கூறியிருந்தது திமுக வெளியிட்ட செய்தி குறிப்பு.


 
 
அந்த செய்தி குறிப்பில், தலைவர் கலைஞர் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்கள்.
 
மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று கூறப்பட்டது.
 
அவரை யாரும் சந்திக்க வர வேண்டாம் என கூறும் அளவுக்கு என்ன பிரச்சனை என்பதை திமுக வட்டாரத்தில் விசாரித்ததில், அவருக்கு உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரால் சட்டை போட முடியவில்லையாம். கைகளிலும் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கை, கால்களில் லேசான வீக்கம் உள்ளது. எனவே தான் அவரை யாரும் பார்க்க வர வேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? மண்ணின் மைந்தர் ஆள வேண்டுமா? – பொங்கி எழுந்த அமித்ஷா!

வங்கக் கடலில் இன்று புயல் சின்னம்: தமிழகத்தில் 6 நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு..!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று விசாகத் திருவிழா.. குவிந்த பக்தர்கள்..!

4 கோடி ரூபாய் பணம் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: பாஜக மனு தாக்கல்..!

அண்ணனுக்கு நன்றி.. ராகுல் காந்தியை புகழ்ந்த செல்லூர் ராஜூவுக்கு காங்கிரஸ் பிரமுகர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments