Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாமக்கல்லில் ஆளுனர் திடீர் ஆய்வு: கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது

Webdunia
சனி, 23 ஜூன் 2018 (07:33 IST)
தமிழக ஆளுனராக சமீபத்தில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் அவர்கள் அவ்வப்போது திடீர் திடீரென தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி நடந்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தில் ஆளுனர் ஆய்வு செய்வது என்பது முறையற்ற செயல் என்று கூறி திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஆளுனரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆளும் அதிமுக அரசு இதுகுறித்து எந்தவித எதிர்ப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை
 
இந்த நேற்று திடீரென நாமக்கல்லில் ஆளுனர் பன்வாரிலால் ஆய்வு செய்தார். ஆளுனரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநரின் கார் மீது கருப்புக்கொடி வீசியதாக 192 திமுகவினர் கைது செய்யப்பட்டு அவர்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
முன்னதாக நாமக்கல் அங்கன்வாடி மையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று ஆய்வு செய்தார் என்பதும் அங்குள்ள அதிகாரிகளிடம் அவர் சில விளக்கங்களை கேட்டு பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
ஆளுனர் ஆய்வு குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியபோது, 'நாமக்கல்லில் மக்கள் நலனுக்காகத்தான் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை' என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments