சென்னையில் பூத் ஸ்லிப்புடன் பணம் விநியோகம்! – அதிமுக மீது திமுக குற்றச்சாட்டு!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:51 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அதிமுகவினர் பூத் ஸ்லிப்புடன் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி திருவான்மியூரில் 179வது வார்டு சிங்காரவேலன் நகரில் பூத் ஸ்லிப்புடன் அதிமுகவினர் பணம் வழங்குவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணம் வழங்கிய அதிமுகவினரை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிவிட்டதாக திமுகவினர் கூறிய நிலையில் போலீஸார் பணம் வழங்கியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 18 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments