Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக, அதிமுக தேர்தல் பணிமனைகளுக்கு சீல்

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (12:12 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அனுமதி பெறாமல் பணிமனைகள் அமைத்த திமுக மற்றும் அதிமுகவின் பணிமனைகளுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளன. 
இந்த நிலையில் அனுமதி இன்றி திமுக அதிமுக பணிமனைகள் செயல்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அதிரடியாக தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 
 
திமுகவின் 10 பணிமனைகள் மற்றும் அதிமுகவின் 4 பணிமனைகள் அனுமதி இல்லாமல் இயங்குவதை கண்டுபிடித்த தேர்தல் அதிகாரிகள் அந்த பணிமனைகளுக்கு சீல் வைத்தனர். இதனால் அதிமுக திமுகவினர் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments