Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

Webdunia
சனி, 13 பிப்ரவரி 2016 (14:16 IST)
கருணாநிதியின் அழைப்பை ஏற்று திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


 

 
காங்கிரஸ் கட்சியின மேலிடப் பொருப்பாளர் குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதியானது. இதன் பின்னர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது மு.க.ஸ்டாலின் கூறியதாவது:–
 
திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் இன்று திமுக தலைவர் கலைஞருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
 
திமுக தலைமையில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான ஆட்சி அமைய அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
 
திமுக கூட்டணிக்கு தேமுதிக வரவேண்டும் என்று கலைஞர் ஊடகங்கள் மூலமாக ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.
 
அந்த அழைப்பே போதுமானது என்று கருதுகிறோம். அதனை ஏற்று விஜயகாந்த் வரும் போது நல்ல முடிவு ஏற்படும். அவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments