Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் உள்ள குழப்பத்திற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்.. என்ன நடக்கும்?

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:14 IST)
திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு மற்றும் எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தி வருவதாக கூறப்பட்டாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் சின்னம்.

திமுக தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் தாங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அரசியல் கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு தொகுதிகளில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி என்று கூறப்படும் நிலையில் அந்த ஒரு தொகுதியும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக கூறி வருகிறது.

ஆனால் தங்களது பானை சின்னத்தில் தான் போட்டு விடுவோம் என்று விசிகவும், அதேபோல் அதிமுக தங்களது பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவும் கூறி வருவதால் தான் இன்னும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அடுத்த பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டு சுமுக முடிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

டெல்லிக்கு வந்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

தமிழ்நாட்டுல இருக்கேன்! முடிஞ்சா இங்க வாங்க! சிவசேனா தொண்டர்களுக்கு சவால் விட்ட குணால் கம்ரா!

பஸ்சை கடத்திய கல்லூரி மாணவர்கள்: புதுக்கோட்டையில் பரபரப்பு

சவுக்கு சங்கர் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது; அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments