Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கூட்டணியில் உள்ள குழப்பத்திற்கு இந்த ஒரே ஒரு காரணம் தான்.. என்ன நடக்கும்?

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (07:14 IST)
திமுக கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதி உடன்பாடு மற்றும் எத்தனை தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடத்தி வருவதாக கூறப்பட்டாலும் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுதான் சின்னம்.

திமுக தனது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளிடம் வலியுறுத்தி வருவதாகவும் ஆனால் தாங்கள் சொந்த சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என அரசியல் கட்சிகள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இரண்டு தொகுதிகளில் உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. அதேபோல் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி என்று கூறப்படும் நிலையில் அந்த ஒரு தொகுதியும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று திமுக கூறி வருகிறது.

ஆனால் தங்களது பானை சின்னத்தில் தான் போட்டு விடுவோம் என்று விசிகவும், அதேபோல் அதிமுக தங்களது பம்பரம் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று மதிமுகவும் கூறி வருவதால் தான் இன்னும் சமூக உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அடுத்த பேச்சு வார்த்தைகள் ஏற்பட்டு சுமுக முடிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments