Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: கருணாநிதி உள்பட தலைவர்கள் மரியாதை

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: கருணாநிதி உள்பட தலைவர்கள் மரியாதை
, திங்கள், 15 செப்டம்பர் 2014 (16:18 IST)
பேரறிஞர் அண்ணாவின் 106வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்பட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொதுச்செயலளார் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், திருச்சி சிவா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 
முதல்வர் ஜெயலலிதா, கோவை அவினாசி சாலையில் எல்.ஐ.சி கார்னரில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று மாலை 4.45 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
 
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையர் ஜஸ்பிர் சிங் பஜாஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்தநிகழ்ச்சியின் பொது தமிழ்நாடு இல்ல அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil