Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன் எல்லோரும் யோசியுங்கள்: பிரேமலதா

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (07:48 IST)
பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக விலக்கி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள அரசியல் கட்சிகள் அதிமுகவுடன் இணையுமா அல்லது பாஜகவுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழகத்திற்கு பாஜக எதுவும் செய்யவில்லை என்றும் கச்சத்தீவு பிரச்சனை, காவிரி பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை உட்பட எந்த பிரச்சனையும் தீர்க்கவில்லை என்றும் எனவே தமிழகத்திற்கு எந்த விதமான நல்லதும் செய்யாத பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு தமிழக அரசியல் கட்சிகள் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
இதனை அடுத்து தேமுதிக பாஜகவுடன் கூட்டணியில் சேராது என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments