Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: டி.கே.ரெங்கராஜன் பேட்டி

தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: டி.கே.ரெங்கராஜன் பேட்டி
, சனி, 7 மே 2016 (21:28 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் கூறியுள்ளார்.


 
 
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தமிழகத்தில் மாற்றத்துக்கான அறிகுறி ஏற்பட்டுள்ளதாகவும், தேமுதிக-மக்கள் நல கூட்டணி மாற்று அரசியலை உருவாக்கி இருப்பதாக கூறியுள்ளார்.
 
அதிமுக, திமுக கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி நிலவி வருவதாக ஒரு மாய தோற்றத்தை உருவாக்கி வருவதாக குற்றம் சாட்டினார் அவர். தேர்தலில் போட்டியிடாத வைகோவின் விவகாரம், அவரது கட்சியின் விவகாரம். அதைப்பற்றி கருத்து சொல்ல முடியாது என்று கூறிய டி.கே.ரெங்கராஜன் தமிழகத்தில் எங்களது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் ராகுல் காந்திக்கு கருப்புக்கொடி: 91 பேர் கைது