Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளுவரை வைத்து அரசியல் செய்வதா? விஜயகாந்த் வேதனை

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (15:05 IST)
திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
பிள்ளையார்ப்பட்டியில் மர்ம ஆசாமிகளால் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்ற கருத்து பரவலான விவாதங்களை ஏற்படுத்தியது.
 
பிள்ளையார்ப்பட்டியில் சேதப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் சிலை மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து பல கட்சி தலைவர்களும் நேரில் சென்று திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். அதோடு தமிழுக்கும், தமிழர்களுக்கும் பொதுவான திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை எந்த கட்சியாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும் என விஜயகாந்த் கோரிக்கை வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காண கிடைக்காத கண்கொள்ளா காட்சி.. திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு..!

உங்களிடம் கூகுள் Pixel 6a இருக்கிறதா? உங்களுக்கு கூகுள் தருகிறது ரூ.8500.. எப்படி வாங்குவது?

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments