Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக ஒரு கட்சியல்ல, பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி: சந்திரகுமார்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (06:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரகுமார், தேமுதிக மீதும் பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
தேமுதிகவின் அனைத்து முடிவுகளையும் பிரேமலதாவும் சுதீஷும் மட்டுமே எடுத்து வருவதாகவும், இருவருக்கும் கொள்கை எல்லாம் கிடையாது, ஒரே குறிக்கோள் பணம் தான் என்றும் சந்திரகுமார், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
தேமுதிக ஒரு காலத்தில் கட்சியாக இருந்தது என்றும், ஆனால் தற்போது பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் கூறிய சந்திரகுமார், அதிமுகவிடம் அதிக பேரம் பேசுவதற்காக திமுகவிடம் கூட்டணி சேர்வது போல நாடகமாடியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்திரகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேமுதிக நிர்வாகிகள் என்ன பதில் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments