Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி கூட்டணியா வேணாம்.. சோலாவாக களமிறங்குவோம்! – தேமுதிக அதிரடி முடிவு?

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (15:30 IST)
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம் கூட முழுதாய் இல்லாத நிலையில் அரசியல் கட்சிகள் ஏறத்தாழ கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியில் இருந்து விலகியது. அதை தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்தது..

ஆனால் அதற்குள்ளாக தேமுதிக, அமமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அமமுக – தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் அதிலும் சரியான உடன்பாடு ஏற்படாததாக பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக தொகுதி வாரியாக வேட்பாளர்கள் குறித்து கலந்தாலோசனை செய்து வருவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments