Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திவாகரனை அழைத்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள்: கைது நடவடிக்கையா?

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (11:20 IST)
இன்று காலை சென்னையில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் ஆரம்பித்த வருமான வரித்துறையினர்களின் சோதனை சசிகலா குடும்பத்தினர்கள் அனைவரையும் வளைத்துவிட்ட நிலையில் சற்றுமுன்னர் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.



 
 
திவாகரன் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கவே அவர் அலுவலகம் அழைத்து செல்லப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் விளக்கம் கேட்ட பின்னர் கைது நடவடிக்கை இருக்குமா? என்பது குறித்த உறுதியான தகவல் இதுவரை இல்லை
 
ஆனால் சசிகலா குடும்பத்தினர் அனைவரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடந்து வருவதால் இன்று மாலை ஒருசில கைது நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments