Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா தொற்று: இன்று முதலிடம் பிடித்த திருப்பூர்

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:46 IST)
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 98 பேர்களில் திருப்பூர் மாவட்டத்தினர் மட்டும் 18 பேர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் கரூரில் 15 பேர்களும் மதுரையில் 14 பேர்களும், சென்னையில் 9 பேர்களும், கோவையில் 7 பேர்களும், விருதுநகரில் 6 பேர்களும், நாகையில் 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சென்னையில் 208 பேர்களும், கோவையில் 120 பேர்களும், திருப்பூரில் 78 பேர்களும், ஈரோட்டில் 64 பேர்களும், திண்டுக்கல் மற்றும் நெல்லையில் தலா 55 பேர்களும், நாமக்கல் மற்றும் செங்கல்பட்டில் 45 பேர்களும், திருச்சியில் 43 பேர்களும், தேனியில் 41 பேர்களும், கரூரில் 40 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழகத்தில் மிகவும் குறைவாக பெரம்பலூர் மற்றும் அரியலூரில் தலா ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் 3 பேர்களும், ராமநாதபுரம் மற்றும் தென்காசியில் தலா 5 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments